நாத விந்து கலாதீ நமோநம
(இந்த ஒரு பாட்டில் தான் எத்தனை செய்திகள்)
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் நண்பர்
கேரள தேசம் கொடுங்கோளூர் பகுதி திருவஞ்சிக்களம் பதியிலே
இருந்து ஆட்சி செய்த ராஜன் சேரமான் பெருமாள் நாயனார்
அந்த மகா பக்திமான் இருந்த
சேர தேசம், அதைச் சேர்ந்த
கொங்கு நாடு .அதனுள்
வைகாவூர் பகுதி, அங்கே இருக்கும்
ஆவினங்குடி பதியாகிய பழனியம்பதியில்
எழுந்தருளியிருக்கும் தேவர்களின் தலைவரே உமக்கு வணக்கம்
நாத விந்து கலாதீ நமோநம … லிங்கம், பீடம் (சிவ சக்தி) ஆகிய தத்துவங்களுக்கு மூலப்பொருளே, போற்றி, போற்றி,
வேத மந்த்ர சொரூபா நமோநம … வேதங்கள், மந்திரங்கள், இவற்றின் உருவமாக விளங்குபவனே, போற்றி, போற்றி,
ஞான பண்டித ஸாமீ நமோநம …
வெகு கோடி நாம சம்பு குமாரா நமோநம … பல கோடிக் கணக்கான திருப்பெயர்களைக் கொண்ட சிவனின் புதல்வனே, போற்றி, போற்றி
போக அந்தரி பாலா நமோநம … (அனைத்து உயிர்களுக்கெல்லாம்) இன்பங்களை அளிக்கும் பார்வதியின் குமாரனே, போற்றி, போற்றி
நாக பந்த மயூரா நமோநம … தன் காலினால் பாம்பை அடக்கிக் கட்டியுள்ள மயிலை வாகனமாகக் கொண்டவனே, போற்றி, போற்றி,
பரசூரர் சேத தண்ட விநோதா நமோநம … எதிரிகளான சூரர்களை தண்டித்து அழிக்கும் திருவிளையாடல் புரிந்தவனே, போற்றி, போற்றி,
கீத கிண்கிணி பாதா நமோநம … இசை ஒலி எழுப்பும் சதங்கைகளை உடைய திருப்பாதங்களைக் கொண்டவனே, போற்றி, போற்றி
தீர சம்ப்ரம வீரா நமோநம … மிகவும் பராக்ரமசாலியான போர்வீரனே, போற்றி, போற்றி,
கிரிராஜ … மலைகளுக்கெல்லாம் அரசனே,
தீப மங்கள ஜோதீ நமோநம … திருவிளக்குகளின் மங்களகரமான ஒளியே, போற்றி, போற்றி,
தூய அம்பல லீலா நமோநம … பரிசுத்தமான பரவெளியில் லீலைகள் புரிபவனே, போற்றி, போற்றி,
தேவ குஞ்சரி பாகா நமோநம … தேவயானையை மணாட்டியாகப் பக்கத்தில் கொண்டவனே, போற்றி, போற்றி,
அருள்தாராய் … உனது திருவருளைக் கொடுத்து அருள்வாயாக.
ஈதலும் பல கோலால பூஜையும் ஓதலும் குண ஆசார நீதியும் … ஈரமும் குரு சீர்பாத சேவையும் மறவாத (சோழமண்டலத்தில்),
ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை … சோழ மண்டல மீதே மநோகர
ஏழு உலகங்களிலுள்ளோரும் மெச்சுகின்ற காவேரி நதியால் செழித்து வளமுறும் சோழ தேசம்
ராஜ கெம்பிர நாடாளும் நாயக …, மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் ராஜகெம்பீரம் என்னும் நாட்டை* ஆளுகின்ற அரசனே,
வயலூரா … வயலூருக்குத் தலைவா,
தானம்
தவம்
பூஜை
வேதம் ஓதுதல்
நற்குணம்
ஆசார ஒழுக்கம்
கருணை
குருசேவை இவைகளை மறவாமல் பெற்று இருக்கிற சோழதேசம்
அதில் பாயும் காவிரி நதி
அதில் இருக்கிற ராஜகெம்பீர நாடு
அதில் உள்ள வயலூர்
ஆதரம் பயில் ஆரூரர் தோழமை … தன்மீது அன்புவைத்த திருவாரூர் சுந்தரமூர்த்திப் பெருமானது நட்பை
சேர்தல் கொண்டவரோடே முனாளினில் … நாடியவராய், அவருடன் முன்பொருநாள்,
ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையிலேகி … ஆடலில் சிறந்த, விரும்பத்தக்க குதிரை மீது ஏறி கயிலை மாமலைக்குப் போய் (அங்கே)
@@@@@@
ஆதி அந்தவுலாவாசு பாடிய … ஆதி உலா எனப்படும் அழகிய (கயிலாய ஞானக்) கலிவெண்பாவை பாடலாகப் பாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில் … சேரர் பெருமானாம் சேரமான் பெருமான்** நாயனாருக்கு உரித்தான கொங்கு மண்டலத்து வைகாவூர் என்னும் சிறந்த நாட்டுப் பகுதியில் இருக்கும்
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே. … திரு ஆவினன்குடி (பழநிமலையின் அடிவாரம்) என்னும் தலத்தில் வாழ்வு கொண்டிருக்கும், தேவர்களின் பெருமாளே.
(@@@@@@ இந்த கதை தனியாக சொல்லப்படும்)